நண்பர்களே இந்த வருட பொங்கல் மிகவும் சிறப்பானது...இது எங்களுக்கு பன்னிரெண்டாம் வருட பொங்கல் விழா போட்டிகள். எங்கள் குழுவின் பெயர் இளைய தோழர்கள்...
முதன் முதலில் நான் மேனிலை இரண்டாம் ஆண்டு படித்த போது நடத்தியது ...அப்போது நான், அன்பு மாப்பிள்ளை, சங்கர் மற்றும் இதர பிற நண்பர்கள் சேர்ந்து நடத்தினோம் ....அப்போதெல்லாம் ஊர் மக்களிடம் நன்கொடை வசூலிக்க காலையில் இருந்து சுற்றுவோம். ஆண்டுகள் செல்ல செல்ல என் நண்பர்கள் பலர் வேலைக்கு சென்று விட்ட காரணத்தினால் எங்களுக்கு பணம் வசூல் செய்ய ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.
நன்றாக நினைவில் இருக்கிறது எனக்கு, என் தந்தை மற்றும் அவர் நண்பர்கள் சேர்ந்து நடத்திய பொங்கல் போட்டியை விசமிகள் சிலர் மேடையினை கவிழ்த்து
போட்டியை நிறுத்தி விட்டார்கள் , இந்த காரணத்தால் நண்பர்கள் குழு பொங்கல் போட்டியை நடத்துவது இல்லை. ஆனால் இளைய தோழர்களாகிய நாங்கள் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் நடத்தி வருகிறோம். இது ஒன்றும் ஒரு பெரிய விஷயம் இல்லைதான்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் சில தலைப்புகளை பேச்சு போட்டி தலைப்பாக கொடுத்தோம் , அவற்றில் சில...
௧) நமது ஊரின் இன்றைய நிலை
Saturday, February 13, 2010
Subscribe to:
Posts (Atom)